Friday, August 2, 2013

குரோவேஷியா பயணம் -Lovran, Zagreb- 24.07.13

முதல்நாள் ஹைக்கிங் சென்று வந்ததால் அனைவருக்கும் நல்ல களைப்பாக இருந்தது. அதனால் மெதுவாக எழுந்து காலை சாப்பாட்டிற்குபின்  பக்கத்து கிராமத்துக்கு மட்டும் காரிலே ஒரு ரிப் அடித்துவிட்டு, மதியம் கடலுக்கு நீராட சென்றோம்.

நாங்களும் இங்கே கூட்டமாக இருக்கிறது, அங்கே கூட்டமாகயிருக்கிறது என்று பல பீச்சுக்களை கடந்து கடைசியில் கார் குறைவாக பார்க் செய்திருந்த இடத்தில் நிறுத்திவிட்டு உள்ளே சென்றால் அங்கேயும் நல்ல கூட்டம் :(

வெயில் 35 டிகிரி இருந்ததால் சுற்றுலா வந்த அனைவரும் அங்கு தான் இருந்தார்கள். ஒருபக்கம் சிறுவர்கள் பயமின்றி கடலில் தனியாக சென்று விளையாடிக்கொண்டிருந்தார்கள் மறுபக்கம் தாத்தா, பாட்டிக்கள் ஹாயாக சன்பாத் எடுத்துக்கொண்டிருந்தார்கள் :) சிறிய குழந்தைகளுடன் வந்திருந்த அம்மாக்களும், அப்பாக்களும் கரையிலேயே அவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தார்கள். நாங்களும் கடலில் காலை வைக்கலாம் என்று போனால், தண்ணிர் சூப்பர் குளிராகயிருந்தது. சத்யா எப்போதும் போல் "Na und...ist eagal" என்று அவன் ஸ்டைலில் தோளைத்தூக்கி ஜெர்மனில் சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டான், அவனைத்தொடர்ந்து என் கணவரும் செல்ல நானும் விபூவும் யோசித்துக்கொண்டே காலைமட்டும் நனைத்தோம். சிறிதுநேரத்தில் சத்யா, விபூவையும் இழுத்துக்கொண்டான் :) மாலை விட்டிற்கு சென்று ரைஸ், சிக்கன் என்று சாப்பிட்டு அன்றைய தினத்தை கழித்தோம்.

அடுத்தநாள் குரோவேஷியாவின் தலைநகர் சாக்ரஃப் (Zagreb) நோக்கி பயணம் தொடங்கியது.

 நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து 186கிமீ தூரத்தில் இருந்தது. கிட்டத்தட்ட 2 மணிநேரம் கார் பயணம், முதலில் அவ்வளவு தூரம் வேண்டாம் என்றுதான் நினைத்தோம். விபூ இவ்வளவுதூரம் வந்துவிட்டு போகாமலிருந்தால் எப்படி என்று நினைத்ததால் ஒகே அதையும் பார்த்து விடலாம் என்று கிளம்பினோம் :)


 போகும் வழியெல்லாம் மலைகள் சூழ்ந்து இயற்கை அழகுடன் சேர்ந்து காட்சியளித்தது பார்ப்பதற்கு ரம்மியமாக இருந்தது.
ரசித்துக்கொண்டே சாக்ரஃப் வந்துசேர்ந்தோம். கொளுத்திய வெயிலைப்பார்த்தவுடன் ஊரை சுற்றிப்பார்க்கும் ஆசையே போய்விட்டது. முதலில் சர்ச் பார்க்கலாம் என்று உள்ளே சென்றோம். ஆஹா, வெயிலின் அருமை நிழலிலே தெரிந்தது :) அமைதியாக அரைமணிநேரம் அங்கேயே உட்கார்ந்திருந்தோம்.
பின் அங்கிருந்து கிளம்பி சிட்டி சுற்றிப்பார்க்க கிளம்பினோம். அடித்த வெயிலிலுக்கு சிறிது நேரத்திலேயே வானம் இருண்டு மழை பொழிய தொடங்கியது. நாங்களும் வீட்டிற்கு கிளம்பினோம்.

பயணத்தின் ஹைலைட்டான அடுத்த நாள் புரோகிராமை நினைத்து நினைத்து சந்தோஷப்பட்டு!!! தூங்கச்சென்றோம் :)))

                                                      ஆவலாக உள்ளதா !!!
                                                                           விரைவில் தொடருகிறேன்....

No comments:

Post a Comment