Saturday, September 29, 2012

கோடைவிடுமுறை நார்வே: Kjerag- 16.08.12

காலை எழுந்து, எல்லோரும் மிக மிக ஆவலாக எதிர்பார்த்துக்காத்திருந்த கியராக் மலை பார்க்க விரைவாக கிளம்ப வேண்டும் என்று ப்ளான், ஆனால் எல்லோரும் குளித்து, மேக்-அப் செய்து, காலை உணவை, வேறு என்ன எப்போதும்போல் ப்ரெட், கார்ன்ப்ளக்ஸ் தான், முடித்து கிளம்பும்முன் எப்போதும் போல் காலை 11:00 மணியாகி விட்டது :)
வீட்டின் வெளியே வந்து பார்த்தால் ஒரு பக்கம் பனிமூட்டமாகவும், மறுபக்கம் வெயிலாகவும் காட்சியளித்தது. ஆகா என்னடா இது இந்த மதுரைக்கு வந்த சோதனை என்று நினைத்தோம், இருந்தாலும் கியராக் மலை, நாங்கள் தங்கியிருந்த சிர்டால் ஊரிலிருந்து ஒன்றரைமணி தூரத்தில் இருந்தது. மனதை தேற்றிக்கொண்டு எல்லாம் நாம் அங்கு போய்ச்சேருவதற்குள் வெயில் வந்துவிடும் என்று வண்டியை கிளப்பினோம். போகும் வழியெல்லாம் மிக மிக அற்புதமாக இருந்தது. அப்போது நிற்பதற்கு நேரமில்லை, இண்டெர்நெட்டில் கியராக் மலை ஏறி இறங்குவதற்கு 4 மணிநேரம் போட்டிருந்தது, நமக்கு எப்படியும் குறைந்தது 6  மணிநேரம் ஆகும் என்று வண்டியை நேராக எங்கும் நிற்காமல் கியராக் நோக்கி விட்டோம்.

அதனால் காரில் இருந்தபடியே ரசித்துக்கொண்டு அப்படியே போட்டோ எடுத்துக்கொண்டோம். மதியம் 12:30 மணிக்கு கியாரக் வந்தடைந்தோம். காரை பார்க் செய்துவிட்டு மலை ஏறக்கிளம்பினோம்.


காற்று ஆளையே தூக்கிக்கொண்டு போவதுபோல அடித்தது. பேய்க்காற்று என்று கேள்விதான் பட்டிருக்கிறேன், இன்று தான் நேரில் அனுபவித்தேன். எங்கு நம்மையே தூக்கிக்கொண்டு போய்விடுமோ என்று பயமாக இருந்தது. மலையோ அதற்குமேல் வெறும் மொட்டைமலையாக காட்சி அளித்தது, ஏறுவதற்கு படிகள் இல்லை, பிடிப்பதற்குக்கூட சில இடங்களில் மட்டுமே கம்பியிருந்தது, பல இடங்களில் ஒன்றுமேயில்லை. ம்ம்ம்.... எப்படி ஏறுவது என்று அப்போதே கவலை ஆரம்பித்துவிட்டது. ஓரு வழியாக சுற்றிச்சுற்றி ஏற ஆரம்பித்தோம்.


நாங்கள் மட்டுமில்லை, எங்களைப்போல நிறைய பேர் அங்கு வந்தபின்னும் யோசித்து கொண்டிருந்தார்கள்.
போகுப்போக பாதை மோசமாகிக்கொண்டே போனது.































மேலே ஏற ஏற மேகம் இருட்டிக்கொண்டுவரத்தொடங்கியது,கொஞ்சநேரத்தில்
மழையும் ஆரம்பித்தது. எங்களுடன் வந்தவர்களும் திரும்ப ஆரம்பித்தார்கள். நாங்கள் யோசித்துக்கொண்டிருக்கையில் திரும்பிவந்து கொண்டிருந்தவர்களும் இதற்குமேல் போக முடியாது, பனிமூட்டம் மலையை மூடிவிட்டது என்று கூறினார்கள். வேறுவழியில்லாமல் பாதிவழியிலேயே திரும்பினோம். 825 மீட்டர் மலை உயரத்தில் இருந்ததால் மழை சட்டென்று பெரிதாகி நன்கு பெய்யத்தொடங்கியது. செங்குத்தான பாறைகள் எல்லாம் மழையில் நனைந்து, நடக்கவே பயமாக இருந்தது. விபூவையும், சத்யாவையும் இறங்கும்படி சொல்லிவிட்டு, மெதுவாக உயிரைக்கையில் பிடித்துக்கொண்டு அடிமேல் அடிவைத்து இறங்கினோம்.

மலையில் சொட்டச்சொட்ட நனைந்துகொண்டே இறங்கி ஒருவழியாக காரை அடைந்தோம். கனத்த மனத்துடனும், மிகுந்த சோகத்துடனும் சொட்டச்சொட்ட நனைந்த உடைகளுடன் நடுங்கிக்கொண்டே வீட்டிற்கு காரை கிளப்பினோம் :( மாலை 6 அரைமணிக்கு வீட்டிற்கு வந்துசேர்ந்தோம். அனைவரும் மிகுந்த அசதியில் இருந்ததால் சீக்கிரமாக சாப்பிட்டுவிட்டு படுத்தோம்.

அடுத்தநாள் எழுந்தபோதே நன்றாக வெயில் அடித்தது. அடுத்த ஊரான லிசபோட்டன் (Lyseboten) போவதற்கு தயாரானோம்.
 
                                                                                     பயணம் தொடரும்...................













2 comments:

  1. எனக்கு மலை ஏறின மாதிரி இருந்தது, செல்வி. மலை வந்து கெடுத்துடுச்சு போல! நல்ல இடம், படங்கள்.

    ReplyDelete