Tuesday, September 18, 2012

2012 கோடைவிடுமுறை-நார்வே


பயண ஏற்பாடுகள்
விடுமுறை விடுவதற்கு 2,3 மாதத்திற்கு முன்பே எப்போதும் போல் இந்த விடுமுறைக்கும் எங்கு செல்வது என்று எங்கள் 4 பேருக்கும் பெரிய பட்டிமன்றமே நடந்தது, இந்தியா, அமெரிக்கா, நார்வே....? என பட்டியல் நீண்டு கொண்டே போனது. கடைசியில் எல்லோரும் ஒருமனதாக நார்வேக்கு ஓட்டுப்போட்டோம். எந்த நாட்டிற்கு என்று முடிவுசெய்வதற்குள் ஜூன் மாதக்கடைசியாகி விட்டது.

அடுத்ததாக எங்கெங்கு செல்வது என்று நீண்ட பட்டியல் போட்டோம். கீழே தெற்கில் தொடங்கி மேலே Northpole வரை சென்று வரலாம் என்று ரொம்ப சந்தோசமாக plan போட்டு விட்டு, பல முறை நார்வே சென்று வந்த ஜெர்மன் friend-டிடம் கலந்தாலோசித்தோம். பட்டியலை பார்த்து விட்டு சிரித்துக்கொண்டே என் கணவரிடம் சொன்னார்:பூபதி, நீ ஜெர்மனியில் காரில் பறப்பது போல்,நார்வேயிலெல்லாம் பறக்க முடியாது, எங்கு சென்றாலும் மிகுந்த ஏற்ற இறக்கமும், எக்கசக்க ஹேர்பின் பெண்டுகளும் உண்டு. அதனால் கிமீ குறைவாக இருந்தாலும் ஒரு இடத்திலிருந்து மற்றொரிடத்திற்கு செல்லுவதற்கு நேரம் நிறையவே எடுக்கும் என்றும் விளக்கினார். நார்த்போல் செல்லும் கனவில் இருந்த எனக்கு மிகுந்த வருத்தமாகி விட்டது. எனது கணவர் உடனே சமாதானப்படுதினார்- நார்வே பக்கத்திலே தானே இருக்கிறது, அடுத்த விடுமுறைக்கும் போய்விட்டால் போச்சு என்று. வேறு வழியில்லாமல் "ரூட்ட மாத்து மாமே" என்று சொல்லி ஓஸ்லோ(Oslo)-வில் தொடங்கி, நடுநார்வேயில் போர்சண்ட்(Forsand), மேற்கே ப்பேர்கன்(Bergen), ஓமாஸ்ரண்ட்(Omastrand), நார்த்அட்லாண்டிக்ரூட்(Northatlanticstreet), கைராங்கர் (Geiranger)  வரை சென்று, பின்பு ஸ்வீடன், டென்மார்க் வழியாக ஜெர்மன் திரும்புவது என்று முடிவுசெய்தோம். ஆனால் நார்வே சென்றபின் வேறு பிளான் மாற்றினோம் ;) !!! அது பற்றி பின்னால் சொல்கிறேன்:)


 நார்வேயில் எங்கெங்கு செல்வது என்று முடிவாகிவிட்டது, ஆனால் ஜெர்மனியிலிருந்து நார்வேக்கு 1)கடல்கடந்து கப்பலில் 2)விமானத்தில் அல்லது 3)டென்மார்க், ஸ்வீடன் பாலம் வழியாக செல்லலாம். எங்களுக்கு கப்பலில் எங்கள் காரை ஏற்றிக்கொண்டு செல்வதுதான் சரியாகப்பட்டது. அதனால் முதலில் கப்பலில் புக்செய்தோம்.


ஒரு வழியாக இதையெல்லாம் முடிவு செய்தபின் தங்குவதற்கு அந்தந்த ஊர்களில் வசதியான மற்றும் இயற்கையின் அழகை வீட்டிலிருந்தபடியே ரசிக்கும் வண்ணம் மலையடிவாரம், மலையும்,ஏரியும் இருக்கும் இடம் என்று இண்டெர்நெட்டில் தேடித்தேடி கண்டுபிடித்து புக்செய்தோம்.

ஒரு வாரத்திற்கு முன்பே துணிகள்,சமையலுக்கு தேவையான சாமான்கள், 2 வாரத்திற்கு பதப்படுத்தியபால் என்று எடுத்து போவதற்கு லிஸ்ட் போட்டேன்(1 லிட்டர் 2 யூரோ=72 ரூபாய் என்று இண்டெர்நெட்டில் படித்தபோதே நினைத்துவிட்டேன் 2 வாரத்திற்கு ஜெர்மனியிலிருந்தே வாங்கிச்செல்வதென்று, பால் மட்டுமல்ல எல்லாமே 2,3 மடங்கு ஜெர்மனியைவிட விலைகூடத்தான் :( ) வீட்டில் கணவர், குழந்தைகள் சிரித்தனர். ஆனால் எனக்குத்தான் அங்கு உள்ள விலையை பார்த்து மயக்கமே வந்துவிட்டது, ஆனால் உண்மையிலேயே நார்வேயின் அழகை பார்த்தபின் எல்லாம் மறந்து விட்டது:)

காத்திருந்து,காத்திருந்து நாங்கள் நார்வே கிளம்ப வேண்டிய அந்த நாளும் 14.08.12 வந்தது.
எங்கள் ஊரிலிருந்து துறைமுகம் 600 கிமீ, கூகுல் மேப் 5மணி 30நிமிடம் காட்டியது. கீல்(Kiel,Germany)துறைமுகத்திலிருந்து எங்கள் கப்பல் மதியம் 2 மணிக்கு கிளம்பி அடுத்தநாள் காலை 11 மணிக்கு ஓஸ்லோ சென்றடையும். 

ஆனால் 2 மணி கப்பலுக்கு, ப்ளைட்டில் போவதுபோல் 12 மணிக்கே போர்டிங் என்று சொல்லிவிட்டார்கள். OK, நம்ப கார்தான் எப்பவுமே பறக்குமே அதனால் வீட்டிலிருந்து காலை 06:30 மணிக்குக் கிளம்பினோம். செக்கிங் எல்லாம் முடித்து மதியம்13:15க்கு காரை கப்பலின் அடித்தளத்தில் நிறுத்திவிட்டு, நாங்கள் புக்செய்திருந்த கடல்பக்கம் ஜன்னல் உள்ள 4bed with seaview அறைக்கு ஆர்வமாக சென்றோம்.பெட்டி,படுக்கைகளையெல்லாம் ரூமில் போட்டுவிட்டு வேகமாக கப்பல் கிளம்பும்போது பார்ப்பதற்காக கப்பலின் மேல்தளத்திற்கு 14வது மாடிக்கு சென்றோம். அங்கு ஒரே திருவிழா கூட்டமாக இருந்தது:) எங்களுக்கு முன்பே சென்று கப்பலின் பின்விளிம்பில் நிறைய பேர் இடம்பிடித்திருந்தனர். கீல் நகரத்தை பார்த்து எல்லோரும் டாடா காண்பித்தார்கள்,நாங்களும் தான் :) கப்பலும் அழகாக ஆடாமல் அசையாமல் கிளம்பியது, கொஞ்சம்கொஞ்சமாக ஊர் மறைந்து எந்தபக்கம் திரும்பினாலும் தண்ணீர் தெரிய ஆரம்பித்தது.....


காத்திருங்கள் விரைவில் பயணம் தொடரும்.......  

2 comments:

  1. கலக்குங்க சித்தி :)

    இன்னும் படிக்கலை அப்புறமா படிச்சிட்டு சொல்றேன்

    மோகன்

    ReplyDelete
  2. சூப்பர் சித்தி, நாவல் படிச்ச மாதிரி இருக்கு.

    ரொம்ப நாளுக்கப்புறம் தமிழில் எழுதினாலும், எழுத்துப் பிழை இல்லாம எழுதியது ஆச்சர்யமா இருக்கு.

    நிறைய எழுதுங்க :)

    ReplyDelete