Tuesday, November 20, 2012

கோடைவிடுமுறை நார்வே: Bergen- 21.08.12

நடுவில் இலையுதிர்கால விடுமுறையில் ஸ்லோவெனியா (Slovenia) நாட்டிற்குச்சென்று வந்ததால், நார்வே பயணக்கட்டுரையை தொடரமுடியவில்லை :(


இன்றைய பயணம் பேர்கன் நகரத்தை நோக்கி புறப்பட்டது. இது நாங்கள் தங்கியிருந்த நகரத்திலிருந்து ஒன்றரைமணி தூர பயணத்தில் இருந்தது.

பேர்கென் "மலைகளிடையேயான பசும்புல் நிலம் " என்ற அர்த்தத்தில் கி.பி. 1070 ஆம் ஆண்டு Olav kyrre (s /o Harrald Hardrade ) என்கிற மன்னரால் பெயரிடப்பட்டதாக அறியப்படுகிறது.

இது நார்வேயின் இரண்டாவது பெரிய நகரம். ஐரோப்பாவின் பெரிய துறைமுகங்களில் பேர்கென் துறைமுகமும் ஒன்று என்ற சிறப்பு மிக்க நகரம். இதை தாண்டி வராற்று சிறப்பு மிக்க நகரமும் கூட.

இரண்டாம் உலக போரின் போது, பேர்கென் ஜேர்மன் வசம் இருந்தது, அப்போது பல புராதான கட்டிடங்கள் அழிக்கப்பட்டதாக அறியப்படுகிறது.

டூரிஸ்ட் அலுவலகத்தில் போய், பேர்கன் பற்றிய தகவல் அடங்கிய புத்தகங்களை பெற்றுக்கொண்டு கிளம்பினோம். வயிறும் மதிய சாப்பாட்டை ஞாபகப்படுத்தியது. 


இரண்டடி தூரம் நடந்தவுடன் மீன் மார்கெட், பெரிய தொட்டியிலிருந்து நமக்கு விருப்பப்பட்ட மீனை செலக்ட் செய்யலாம்.
ஆனால் மீனின் வாசனையால் அங்கு நிற்ககூட முடியவில்லை, அப்புறம் எங்கே சாப்பிடுவது :(

அடுத்த கடையைப்பார்த்து நகர்ந்தோம், எங்கு சென்றாலும் மீன் வாடை விடவில்லை. ஒருவழியாக யாமிருக்க பயமேன் என்று சொல்லிய மெக்டொனால்ஸ்ஸை கண்டுபிடித்து சாப்பிட்டு முடித்தோம் ;)



வெளியில் வந்தால் ஒரே கூட்டம்கூட்டமாக கல்லூரி மாணவர்கள் கார்னிவெல் போல் வித்தியாசமாக உடையணிந்து ஊர்வலமாக சென்றார்கள்.
ஊர்வலத்தை பார்த்துவிட்டு பேர்கன் நகரத்தை, நம் ஊரில் நவக்கிரக்ஹத்தை, பிள்ளையாரை சுற்றுவதுபோல் சுற்றிச்சுற்றி வந்து சுற்றிப்பார்த்தோம்.

அதன்பின் அங்கிருந்து கிளம்பி ஊருக்கு வெளியில் இருந்த  ஸ்டாவ் சர்ச் (Stave Church) பார்க்க கிளம்பினோம். 


ஃப்பென்டொப்ட் ஸ்டாவ் சர்ச் (Fantoft Stave Church) வரலாறு மிகவும் பழமையானது, 800 ஆண்டுகளுக்கு முந்ததையது. 

இத்தேவாலயம்
முதலில் சோகன்(Sogn) என்னும் கிராமத்தில்1150-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இத்தேவாலயத்தை இடப்பற்றாக்குறையால் இடிக்கவேண்டிய சூழ்நிலை வந்தது. அப்போது இத்தேவாலயத்தை
ஃபிரெடெரிக் ஜோர்ஜ் என்பவர் வாங்கி,
1883 இல் (இப்போது) பேர்கன் அருகில் உள்ள Fantoft-க்கு சிறுசிறு பகுதிகளாக்கி நகற்றினார். பார்ப்பதற்க்கு மிக அழகாகவும், மிக்க கலைநயத்துடனும் காட்சியளித்தது. காலதாமதமாகிவிட்டதால் எங்களால் வெளித்தோற்றத்தைத்தான் காணமுடிந்தது :(


அங்கிருந்து கிளம்பி திறந்தவெளி பேர்கன் அருங்காட்சியகம் (Gamle Bergen) பார்க்க கிளம்பினோம்.

40 மரவீடுகளைக்கொண்ட இவ்வருங்காட்சியகம் 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளிலிருந்த பல்வேறு பழமையான வீடுகள் மற்றும் கடைகள், பேக்கரி மற்றும்  முடிதிருத்தும் நிலையம் என சிறிய நகர வாழ்க்கையின் ஒரு அரிய தோற்றமாக காட்சியளிக்கிறது.

 
பேர்கன் நகரானது ஏழு மலைகளால் சூழப்பட்டு இருப்பதுடன், ஐரோப்பிய நகரங்களிலேயே அதிக மழையைப் பெறும் நகரமாக முன்னர் அறியப்பட்டிருந்ததால், “குடையுடன் கூடிய நகரம்என்ற செல்லப் பெயரையும் கொண்டிருந்தது. பெயருக்கெற்றார் போல் பகலில் நன்றாக சூரிய ஒளியுடன் இருந்த நகரம் மாலை 6 மணிக்குமேல் பனிமூட்டத்துடன் மழை வர ஆரம்பத்தது. 

நாங்களும் பேர்கன் நகரத்தை பார்த்த சந்தோசத்தில் வீட்டை நோக்கி Omastranda-விற்கு வண்டியை கிளப்பினோம் :)

அடுத்தநாள் போவதற்கு plan செய்திருந்த Glacier மற்றும் Twin waterfall பற்றிய விபரங்களைப்படித்துவிட்டு தூங்கச்சென்றோம்.


                                                    காத்திருங்கள், விரைவில் பயணம் தொடரும் :)













1 comment:

  1. அருமையான இடங்கள், செல்வி. சீக்கிரம் அடுத்த பதிவையும் போட்டு விடுங்கள் :)

    ReplyDelete